திருஞானசம்பந்தர்
புராணம்,
கூற்றுதைத்தார்
மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பகத்தின் கொள்கை பாடி
ஏற்றின்மிசை வருவார் இந்திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமற் றிறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகை யார்புனிதமாகும்
நீற்றின் அணி கோலத்துத் தொண்டர்சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவுகின்றார்.
- சேக்கிழார்.
ஆளுடைய
பிள்ளையார் திருக்கலம்பகம்
யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.
- நம்பியாண்டார்நம்பி.