தருமை ஆதீனப் புலவர், செஞ்சொற் கொண்டல் டாக்டர். திரு. சொ.சிங்காரவேலன் உரை மாட்சி எழுதியுள்ளார். இப்பதிப்பு மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நன்கொடை வெளியீடாக வெளிவருகிறது. இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க.சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் பெருங்கருணையைப் போற்றிஅன்பர்கள் இத்திருமுறையை ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக. | இங்ஙனம், | கட்டளை விசாரணை | ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் | வேளூர் தேவஸ்தானம் | உத்தரவுப்படி, | தருமை ஆதீனம் | வித்துவான் இராமலிங்கத் தம்பிரான் | 13-12-96 | |
|