பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)99.பொது823

  2075.
மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பய னில்லையே.
 

10

 

திருச்சிற்றம்பலம்

 

என்பது பொருள். ஓடும் நீரினை- ஓடும் தண்ணீரை. அட்டி - அள்ளிமுகந்து. மூர்க்கன் - அறிவில்லாதவன்.
     10. பொ-ரை: மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன்? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களபணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை.
     கு-ரை: பொற்றை - மலை. இங்கே கயிலையைக் குறித்தது. உடல் பக்குஇற - உடல் அகப்பட்டு நெரிய. நற்குரையார் கழல் - நல்ல ஓலி பொருந்திய வீரக்கழல்.
 

 

திருநாவுக்கரசர் புராணம்

நாளுமிகும் பணிசெய்து
     குறைந்தடையு நன்னாளிற்
கேளுறுமன் புறவொழுகுங்
     கேண்மையினார் பின்பிறந்தார்
கோளுறுதீ வினைமுந்தப்
     பரசமயங் குறித்ததற்கு
மூளுமனக் கவலையினான்
     முற்றவருந் துயருழந்து.

-தி.12 சேக்கிழார்