பக்கம் எண் :

341
 

தேவியார் தந்திசத்திவிடங்கியாரான 'ஸ்ரீ ஒலோகமாதேவியார்' ஆவர், இவ்வம்மையார் இக்கோயிலைக் கட்டியது முதலாம் இராஜராஜசோழனின் ஆட்சி யாண்டு இருபத்தைந்து. அதாவது இற்றைக்கு 946 ஆண்டுகளுக்கு முன்னதாகும். இச்செய்தி "இராஜராஜதேவர் மகாதேவியார் தந்திசத்திவிடங்கியாரான ஸ்ரீ ஒலோக மாதேவியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர்நாட்டுத் திருக்குடமூக்கில்பால் திருவலஞ்சுழியில் நாம் எடுப்பித்த திருக்கற்றளிப்பிள்ளையார் க்ஷேத்திரபாலதேவர்க்கு"1 என்னும் கல்வெட்டுப் பகுதியால் விளங்கும்.

எழுந்தருளுவித்த பிரதிமைகள்:

"பூமருவிய திருமாதும் புவிமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும்" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய கோப்பர கேசரிபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் இராஜராஜ தேவரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் திருவலஞ்சுழி உடையார் திருமடை வளாகத்தில் இருந்த தேவரடியார் ஆட்கொண்டாள் தேவும் திருவும் உடையாளும், கீழ்க்கடைநின்றாளும் ஆகிய இருவரும் இக்கோயிலில் திருநாவுக்கரையதேவர், திருவாதவூராளி, திருக்கண்ணப்பதேவர் இவர்களை எழுந்தருளுவித்து இவர்களின் வழிபாட்டிற்கு நில நிவந்தம் செய்துள்ளனர்.

சிறப்பு நாள்கள்:

இக்கோயிலில் திருவாதிரைநாளுக்கும் தைப்பூசத் திருநாளுக்கும் வேண்டும் செலவினங்களுக்கு இரண்டாம் இராஜேந்திர சோழன் நிலம் அளித்திருந்தான். அந்நிவந்தத்தை அம்மன்னன் கங்கைகொண்டசோழன் திருமாளிகையில் திருமஞ்சன சாலையில் பள்ளிப்பீடம் காலிங்கராசனில் எழுந்தருளியிருந்து விட்டதாக அவனுடைய கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

பள்ளியறைநாச்சியாரைப் பற்றிய குறிப்பு:

பள்ளியறையில் எழுந்தருளியிருக்கும் இறைவியார் திருப்பள்ளியறை பெரியநாச்சியார் என்னும் பெயரால் குறிக்கப் பெற்றுள்ளனர். இவர் திருமுன்பு எரிவதற்கு ஐந்துநிலைத் தராகுத்து விளக்குக்கள் இரண்டினை, திருபுவனச்சக்கரவர்த்தி இராஜாதிராஜ


1 South Indian Inscriptions, Volume VIII Number 234.