| உள் பிராகாரத்தில், அகோரமூர்த்தி கையில் சூலத்துடன் எழுந்தருளியிருக்கின்றார். அவர்க்கு எதிரில் காளியின் சந்நிதி உள்ளது. சிதம்பரத்தில் இருப்பதுபோலவே இங்கு நடராஜர் பெருமையுடன் விளங்குகின்றார். இப்பதியில் வெள்ளானை பூசித்துப் பேறு பெற்றது. இதை, | "வெள்ளானை வேண்டும்வரம் கொடுப்பர்வெண்காடு மேவிய விகிர்தனாரே"
 |  | -தி.2 ப.35 பா.9 | 
 என்னும் அப்பர் பெருமானின் இத்தலத் தேவராப் பகுதியாலும், | "அயிரா வதம்பணிய மிக்கதனுக் |  | கருள்சுரக்கும் வெண்காடு" |  | -தி.2 ப.48 பா.7 | 
 என்னும், ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியாலும் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் இருக்கின்றன. சைவ எல்லப்ப நாவலர் தலபுராணத்தை இயற்றியுள்ளார். அது அச்சில் வெளிவந்துள்ளது. 65. திருவெண்ணியூர்  தஞ்சாவூர் - திருவாரூர் தொடர் வண்டிப் பாதையில், கோயில் வெண்ணி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு 2.5. கி.மீ. தூரத்திலிருக்கின்றது. தஞ்சை - நீடாமங்கலம், தஞ்சை - திருவாரூர் பேருந்துகளில் கோயில்வெண்ணி என வழங்கும் இவ்வூரை அடையலாம். இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள நூற்றிரண்டாவது தலம். இறைவர் திருப்பெயர் வெண்ணிக்கரும்பர். இறைவி திருப்பெயர் அழகியநாயகி. இறைவர் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து |