பக்கம் எண் :

366
 
2090.அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்

அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி

வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு

வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்

பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்

பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

5


செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற காய்கதிர், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

கு-ரை: மூவா மருந்து - மூப்பாகாமைக்கு ஏதுவாய மருந்து; அமிழ்தம். மறிகடல் - அலைவீசும் கடல். குலவரை - சிறந்த மலை; இவை எட்டுத் திசைகளில் திசைக்கு ஒன்றாகச் சொல்லப்படுவன. தாரகை - விண்மீன்; திரிசுடர்கள் - திரிகின்ற சுடர்கள்; இரண்டு சூரிய சந்திரர்.

5. பொ-ரை: ஒப்பற்ற துணைவன், அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர், ஏனைய சுற்றத்தார், செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து, பெரியபுலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப்பயனை அடியோடு நீக்கி, ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

கு-ரை: அருந்துணை - ஒப்பற்றதுணை. அருமருந்து - கிடைத்தற்கரிய மருந்து; அமிழ்தம். 'தோன்றி' என்பது 'தோன்றிய பின்னர்' எனப்பொருள்தரும். வரும் துணை - உடன்தோன்றும்