பக்கம் எண் :

1025
 
710.மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை

வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே

கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்

கருத்த ழிந்துனக் கேபொறை யானேன்

தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே

தேவ னேதிரு வாவடு துறையுள்

அண்ண லேஎனை அஞ்சல்என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.

2

கு-ரை: 'அமரர்கட்குத் தலைவனே' என, வாளா அருளாது,''அமரர்கள் ஏறே'' என, உருவகித்து அருளினார், அவனது முதன்மையின் சிறப்புத் தேன்றுதற்கு. அமரர்கள் ஏறு, ஏகதேச உருவகம். இது, வலிமை நிலனாக வந்தது. ''ஏறு'' என்ற உருவகம், ஏனைய பெயர்களோடு இயைந்தது. திணைவழுவமைதி.

2. பொ-ரை: நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே, தெளிவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அண்ணலே, தேவர்களாகிய, விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, யான் கண் இல்லேனாயினேன்; அதன்மேலும், உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால், உனக்குத்தான் சுமையாய் விட்டேன்; எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், என்னை 'அஞ்சேல்' என்று சொல்லித்தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.

கு-ரை: ''என்னை வலிய வந்து'' என்றதில், என்னை, உருபு மயக்கம். ''உடம்பில்லடு நோய்'' என்ற லகர ஒற்று, விரித்தல். சுவாமிகள் கண்ணின்றி இருந்ததோடு, உடம்பிற் பிணியுற்று இருந்தமையையும் நினைக்க.

''கருத்தழிந் துனக்கே பொறை யானேன்'' என்றதை, ''கடை முறை உனக்கே பொறையானேன்'' (தி. 7 ப. 60 பா. 5) என்றதனோடு வைத்துக் காண்க.

3. பொ-ரை: நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே, மேலானவனே, ஊமத்தம் பூப் பொருந்திய