பக்கம் எண் :

1133
 
834.

கவ்வைக்கடல் கதறிக்கொணர்

முத்தங்கரைக் கேற்றக்

கொவ்வைத்துவர் வாயார்குடைந்

தாடுந்திருச் சுழியல்

தெய்வத்தினை வழிபாடுசெய்

தெழுவார்அடி தொழுவார்

அவ்வத்திசைக் கரசாகுவர்

அலராள் பிரியாளே.

3

835.மலையான்மகள் மடமாதிட

மாகத்தவண் மற்றுக்

கொலையானையின் உரிபோர்த்தஎம்

பெருமான்திருச் சுழியல்

அலையார்சடை யுடையான்அடி

தொழுவார்பழு துள்ளம்

நிலையார்திகழ் புகழால்நெடு
வானத்துயர் வாரே.

4


3. பொ-ரை: ஓசையையுடைய கடல், முழக்கம்செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்றவரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர்; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர்களை விட்டு நீங்காள்.

கு-ரை: 'திருச்சுழியலில் சென்று வணங்காது, சென்று வணங்கி வருவோரை வணங்கினும் நலம் பயக்கும்' என்றபடி. இதனானே, அடியாரது பெருமையும் உணர்த்தியவாறாயிற்று. "கரைக்கு" என்றது உருபு மயக்கம். சிவபிரானை, 'தெய்வம்' என்றல் பிறர்கோள் பற்றியாம்.

4. பொ-ரை: மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப் பகுதியினளாக, கொலைத் தொழிலையுடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய, திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள், மனத்தில் குற்றம்