| மீண்டும் இவ்வுலகில் வந்து பிறத்தல் சிறுபான்மையாதலின், "வானின் இழிந்திடினும்" என எதிர்மறை உம்மை கொடுத்து அருளிச்செய்தார்.  இனி, "தவஞ்செய்தார் என்றும் தவலோகம் சார்ந்துபவஞ்செய்து பற்ற றுப்பா ராகத் - தவஞ்செய்த
 நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலை"
 - சிவஞானபோதம். சூ. 8 அதி. 1 உடையராகிய அவரை, "மண்டல நாயகராய் வாழ்வர்" என்றது, "வறுமையாம் சிறுமை" இன்றியும், "வாழ்வெனும் மைய" லுட் படாதும் (சிவஞானசித்தி - சூ - 2. 91) எளிதிற் சிவஞானத்தை எய்தி, சீவன் முத்தராய் வாழ்வர் என்றவாறாம். | சேரமான் பெருமாள் நாயனார் புராணம் |  |  |  | மன்னுதிருக் கானப்பேர் |  | வளம்பதியில் வந்தெய்திச் |  | சென்னிவளர் மதியணிந்தார் |  | செழுங் கோயில் வலம்கொண்டு |  | முன்னிறைஞ்சி உள்ளணைந்து |  | முதல்வர்சே வடிதாழ்ந்து |  | பன்னு செழுந் தமிழ்மாலை |  |  பாடினார் பரவினார். |  |  116 |  |  |  | ஆராத காதலுடன் |  | அப்பதியில் பணிந்தேத்திச் |  | சீராரும் திருத்தொண்டர் |  | சிலநாள் அங்கமர்ந்தருளிச் |  | காராரும் மலர்ச்சோலைக் |  | கானப்பேர் கடந்தணைந்தார் |  | போரானேற் றார்கயிலைப் |  | பொருப்பர்திருப் புனவாயில். |  | 117 |  | - தி. 12 சேக்கிழார். | 
 |