மீண்டும் இவ்வுலகில் வந்து பிறத்தல் சிறுபான்மையாதலின், "வானின் இழிந்திடினும்" என எதிர்மறை உம்மை கொடுத்து அருளிச்செய்தார். இனி, "தவஞ்செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து பவஞ்செய்து பற்ற றுப்பா ராகத் - தவஞ்செய்த நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலை" - சிவஞானபோதம். சூ. 8 அதி. 1 உடையராகிய அவரை, "மண்டல நாயகராய் வாழ்வர்" என்றது, "வறுமையாம் சிறுமை" இன்றியும், "வாழ்வெனும் மைய" லுட் படாதும் (சிவஞானசித்தி - சூ - 2. 91) எளிதிற் சிவஞானத்தை எய்தி, சீவன் முத்தராய் வாழ்வர் என்றவாறாம். சேரமான் பெருமாள் நாயனார் புராணம் | | மன்னுதிருக் கானப்பேர் | வளம்பதியில் வந்தெய்திச் | சென்னிவளர் மதியணிந்தார் | செழுங் கோயில் வலம்கொண்டு | முன்னிறைஞ்சி உள்ளணைந்து | முதல்வர்சே வடிதாழ்ந்து | பன்னு செழுந் தமிழ்மாலை | பாடினார் பரவினார். | 116 | | ஆராத காதலுடன் | அப்பதியில் பணிந்தேத்திச் | சீராரும் திருத்தொண்டர் | சிலநாள் அங்கமர்ந்தருளிச் | காராரும் மலர்ச்சோலைக் | கானப்பேர் கடந்தணைந்தார் | போரானேற் றார்கயிலைப் | பொருப்பர்திருப் புனவாயில். | 117 | - தி. 12 சேக்கிழார். |
|