பக்கம் எண் :

1164
 
871.கூடலை யாற்றூரிற்

கொடியிடை யவளோடும்

ஆட லுகந்தானை

அதிசயம் இதுவென்று

நாடிய இன்றமிழால்

நாவல வூரன்சொல்

பாடல்கள் பத்தும்வல்லார்

தம்வினை பற்றறுமே.

10

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: திருக்கூடலையாற்றூரில், கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும், அருள் விளையாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, 'அவன் செய்த இச்செயல் அதிசயம்' என்று சொல்லி, ஆராய்ந்த இனிய தமிழால், திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம்.

கு-ரை: தம்பாற் செய்த திருவிளையாடலை நினைக்கின்றாராதலின், "ஆடல் உகந்தானை" என்று அருளிச்செய்தார். உகத்தல், அதனோடு இருத்தலை உணர்த்திற்று. 'என்று சொல் பாடல்கள்' என இயையும்.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

 
கண்டவர் ககள் கூப்பித்

தொழுதுபின் தொடர்வார் காணார்

வண்டலர் கொன்றையாரை

வடியுடை மழுவொன் றேந்தி

அண்டர்தம் பெருமான் போந்த

அதிசயம் அறியேன் என்று

கொண்டெழு விருப்பினோடும்

கூடலை யாற்றூர் புக்கார்.

103

- தி. 12 சேக்கிழார்