பக்கம் எண் :

1209
 
929.சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே.

7

 

930.கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.

8



வேதத்தை ஓதுகின்ற நாவையும் உடையவனும், தன்னை அடைக்கலமாக அடைபவரது வினைகளை ஒழப்பவனும், என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன்' திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான்.

கு-ரை: "படை" என்றது, அதன் தன்மையை. "படையார் மழுவொன்று பற்றிய கையன்" (திருமுறை - 4. 83. 1) என்றதனை நோக்குக.

7. பொ-ரை: வானத்தில் உலாவிய மதில்கள் நெருப்பில் வெந்தொழியுமாறு அவற்றை வென்ற, வேறுபட்ட தன்மையை உடையவனும், வினைகளைப் போக்குதற்கு மிகவும் நல்ல கடவுளும், வெண்மையான இடபம் ஒன்றை உடையவனும் ஆகிய இறைவன், திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான்.

கு-ரை: "நன்று" என்பது, பெரிதும் எனப் பொருள் தந்தது. 'நன்றும்' எனப் பிரிப்பினும் ஆம்.

8. பொ-ரை: தோகையையுடைய மயில்போலும், வளையை அணிந்த கைகளையுடைய அழகிய மகளிர் பலரும் துதிக்கின்ற, பவளம்போலும் உருவத்தையுடையவனாகிய இறைவன், கரையில் வந்து உலாவுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே, உலகில் உள்ளவரது வினைகளை எல்லாம் தீர்ப்பான்.

கு-ரை: 'கலாபம்' என்னும் ஆரியச் சொல், "கலவம்" எனத் திரிந்தது. 'போல் நல்லார்' என்றது, வினைத்தொகை.