| | 959. | ஓதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட பேதைப் பெருமான் பேணும் பதியாம்
 சீதப் புனல்உண் டெரியைக் காலும்
 சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
 |  |  | 6 | 
 
 கு-ரை: விதி - ஊழ். ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினும் தான்முந் துறும்.
 - குறள் - 380 என்பவாகலின், "ஒல்கா விதி" என்று அருளினார். மார்க்கண்டேயரது ஊழினை அடியோடு அழித்தமையின், இறைவனை, 'விதிக்கு வதை செய்தவன்' என்று அருளினார். உலையா முயற்சி களைகணா ஊழின்வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகறியப்
 பான்முனை தின்று மறலி உயிர்குடித்த
 கான்முளையே போலுங் கரி.
 - நிதிநெறிவிளக்கம் - 50 என, பின்வந்தோர் கூறுதலும் காண்க. இனி 'விதி - தக்கன்' என்பாரும் உளர். 'திதியும்' என்பது, எதுகை நோக்கித் திரிந்து நின்றது. இது, 'திதி' அடியாகப் பிறந்த பெயரெச்சம். 6. பொ-ரை: குளிர்ந்த நீரை உண்டு, தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, மிக்க நீரையுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட, அருள்மிகுந்த பெருமான் விரும்பும் ஊராகும். கு-ரை:  பிறர்நலமே கருதுவதாகிய அன்பே ஆக; அருளே ஆக; அவை தமக்கு வருங் கேட்டினை அறியும் அறிவைப் போக்குமாதலின், அத்தன்மை புலப்படுத்தற்பொருட்டு இறைவனையும் விளைவதறி யாது நஞ்சினை உண்டானாக அருளிச்செய்தார்; எனவே, 'பித்தன்' முதலியபோல, "பேதைப் பெருமான்" என்றதும், பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தாயிற்று. மாந்தளிர்கள் நெருப்புப் போலத் தோன்றுதலின், "சீதப்புனல் உண்டு எரியைக்காலும் சூதம்" என்று அருளிச் செய்தார்; இது விரோதவணி. |