960. | இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே. | | 7 |
961. | காமன் பொடியாக் கண்ஒன் றிமைத்த ஓமக் கடலார் உகந்த இடமாம் தேமென் குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பார் சோற்றுத் துறையே. | | 8 |
962. | இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் |
7. பொ-ரை: உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும், ஏனைய சுற்றத்தாரும், செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, இறந்தவரது எலும்புகளையும்' எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு, புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம். கு-ரை: 'புறங்காட்டில் ஆடினும் தூயவனே' என்பார், 'புறங்காட்டாடும் புனிதன்' என்று அருளினார். 'சுற்றம்' என்பது சொல்லால் அஃறிணை முடிபு கொடுக்கப்பட்டது. 8. பொ-ரை: தேன் பொருந்திய, மெல்லிய கூந்தலையுடைய மகளிர், தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள், வானத்தில் சென்று நிறைகின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த, வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும். கு-ரை: "ஓமக் கடல்" உருவகம். 'வேள்விகள் எல்லாவற்றிலும் முதற்கண் வழிப்படப்படும் முதல்வர்' என்றவாறு. 9. பொ-ரை: தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு, எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும், 'திருச்சோற்றுத்துறை' என்னுந் தலமே, இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு, நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவராகிய இறைவனது இடமாகும்.
|