967. | துருத்தி யுறைவீர் பழனம் பதியாச் | | சோற்றுத் துறையாள்வீர் | | இருக்கை திருவா ரூரே உடையீர் | | மனமே யெனவேண்டா | | அருத்தி யுடைய அடியார் தங்கள் | | அல்லல் சொன்னக்கால் | | வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் | | வாழ்ந்து போதீரே. | | 4 |
968. | செந்தண் பவளந் திகழுஞ் சோலை | | இதுவோ திருவாரூர் | | எந்தம் அடிகேள் இதுவே யாமா | | றுமக்காட் பட்டோர்க்குச் | | சந்தம் பலவும் பாடும் மடியார் | | தங்கண் காணாது | | வந்தெம் பெருமான் முறையோ என்றால் | | வாழ்ந்து போதீரே. | | 5 |
4. பொ-ரை: இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், 'திருத்துருத்தி, திருப்பழனம்' என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர்; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர்; ஆதலின், உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்! கு-ரை: "உறைவீர்" என்றதனை, "பதியா" என்றதன் பின்னர்க்கூட்டுக. பணித்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. 5. பொ-ரை: எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன்; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இதுதானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, 'எம் பெருமானே, முறையோ' என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
|