பாரூர் அறிய என்கண் கொண்டீர் | நீரே பழிப்பட்டீர் | வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் | வாழ்ந்து போதீரே. | 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: "எண்டோள்முக்கண்" என்ற உம்மைத் தொகைச் சொல், "கொண்டீர்" என்ற வினைப்பெயரோடு, இரண்டாவதன் தொகைபடத் தொக்கது. அவற்றது இடையே, "திருமூலட்டானத்து" என்றது நின்று, ஏழாவதன் தொகையாயிற்று. 'கலைகள் பலவாகி, முக்கண், மூலட்டானத்துப் பாகங்கொண்டீர், ஊரறிய, ஆரூரன் என்கண் கொண்டீர்; பழிப்பட்டீர்; வாழ்ந்துபோதீர்; எனக் கொண்டு கூட்டியுரைக்க. தம் பெயரைப் பெய்தருளிச் செய்தமையின், இது திருக்கடைக் காப்பாயிற்று. இதன் பின்னர், இறைவர், சுவாமிகள் பெருமகிழ்வெய்துமாறு கண்ணளித்தருளினமையை அறிந்துகொள்க. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | | மீளா அடிமை என்றெடுத்து | மிக்க தேவர் குலமெல்லாம் | மாளா மேநஞ் சுண்டருளி | மன்னி யிருந்த பெருமானைத் | தாளா தரிக்கும் மெய்யடியார் | தமக்காம் இடர்நீர் தரியீர்என்று | ஆளாந் திருத்தோ ழமைத்திறத்தால் | அஞ்சொல் பதிகம் பாடினார். | 309 | | -தி. 12 சேக்கிழார். |
|