991. | அங்கமொ ராறவையும் அரு | | மாமறை வேள்விகளும் | | எங்கும் இருந்தந்தணர் எரி | | மூன்றவை யோம்புமிடம் | | பங்கய மாமுகத்தாள் உடை | | பங்கன் உறைகோயில் | | செங்கயல் பாயும்வயல் திரு | | வூர்நனி பள்ளியதே. | | 7 |
992. | திங்கட் குறுந்தெரியல் திகழ் | | கண்ணியன் நுண்ணியனாய் | | நங்கட் பிணிகளைவான் அரு | | மாமருந் தேழ்பிறப்பும் | | மங்கத் திருவிரலால் அடர்த் | | தான்வல் அரக்கனையும் | | நங்கட் கருளும்பிரான் நண்ணும் | | ஊர்நனி பள்ளியதே. | | 8 |
7. பொ-ரை: தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம், அந்தணர்கள் மூன்று எரிகளோடே, ஆறு அங்கங்களையும், அரிய வேதங்களையும், வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனிபள்ளியே. கு-ரை: "அவை" பகுதிப்பொருள் விகுதி. முத்தீயை ஓம்புதலே அந்தணர்க்குச் சிறந்த தொழலாகலின், 'எரிமூன்றோடு' என. அவ்விடத்து ஓடுருபு விரிக்க, "ஓம்புமிடம்" என்றது, ஒரு பொருள்மேற் பலபெயராய் வந்தது. செவ்விய கயல் - அழகிய கயல். 8. பொ-ரை: சிறிய பிறையாகிய, விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும், நுண்ணியனாய் நின்று, எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி, நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை
|