பக்கம் எண் :

1260
 

98. திருநன்னிலத்து பெருங்கோயில்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருப்புகலூரில் செங்கல் பொன்னாகப் பெற்றுத் திருவாரூரையடைந்து பெருமானை வணங்கிப் பலநாள் தங்கியிருந்து, அருகில் உள்ள பல பதிகளையும் வணங்கிய பின்னர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, திருநன்னிலத்துப் பெருங்கோயிலையடைந்து பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 56)


குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது பெருமைகளை வகுத்து அருளிச் செய்தது.

பண்: பஞ்சமம்

பதிக எண்: 98

திருச்சிற்றம்பலம்

995.தண்ணியல் வெம்மையினான் தலை

யிற்கடை தோறும்பலி

பண்ணியன் மென்மொழியா ரிடங்

கொண்டுழல் பண்டரங்கன்

புண்ணியநான்மறையோர் முறையா

லடிபோற் றிசைப்ப

ண்ணிய நன்னிலத்துப் பெருங்

கோயில் நயந்தவனே.

1



1. பொ-ரை: புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது, திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி, பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தண்ணிய இயல்பினையும், வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன்; வாயில்கள்தோறும் சென்று, பண்போலும் இயல்பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினை யுடையவன்.

கு-ரை: இறைவனிடத்து அறமாய்க் காணப்படுவதும், மறமாய்க்