| நொச்சியம் பச்சிலையான் நுரை | | தீர்புன லால்தொழுவார் | | நச்சிய நன்னிலத்துப் | | பெருங் கோயில் நயந்தவனே. | | 3 |
998. | பாடிய நான்மறையான் படு | | பல்பிணக் காடரங்கா | | ஆடிய மாநடத்தான் அடி | | போற்றியென் றன்பினராய்ச் | | சூடிய செங்கையினார் பலர் | | தோத்திரம் வாய்த்தசொல்லி | | நாடிய நன்னிலத்துப் பெருங் | | கோயில் நயந்தவனே. | | 4 |
விருப்பம் செல்லுதற்கு இடமானவன்; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன்; பிச்சையேற்று உண்பவன்; உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன். கு-ரை: சிறப்புடைத் தலங்களுள் ஒன்றாதல் பற்றிக் கச்சியை விதந்தோதினார். இன்பமே வடிவினனாகலின், இன்பத்தை விரும்பும் இயல்பினவாய உயிர்கள் பலவற்றின் விருப்பத்திற்கும் இடம் இறைவனே என்க. "பிச்சை உண்ணி; உலகங்கள் எல்லாம் உடையன்" என்றது, அவனது ஒன்றொடொன்றொவ்வா நிலைகளைக் குறித்தருளியவாறு. நுரையுடைய நீர் வழிபாட்டிற்கு ஆகாமையை அறிந்து கொள்க. 4. பொ-ரை: தலைமேற் குவித்த கையை உடைய பலர், மிக்க அன்புடையவர்களாய். 'திருவடி போற்றி' என்று, பொருந்திய தோதிரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன், தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை யுடையவன்; இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற, சிறந்த நடனத்தையுடையவன். கு-ரை: 'பல தோத்திரம்' என்பதும் பாடம். "வாய்த்த" என்றது வினைப்பெயர்.
|