பக்கம் எண் :

1267
 
பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள், பரலோகத்துள் புகுவார்கள்.

கு-ரை: 'சிங்கடி' என்பது, 'சிங்கி' எனக் குறுக்கப்பட்டது. "சடையன்" என்றதன்பின், 'மகன்' என்பது எஞ்சிநின்றது.

 

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

பலநாள் அமர்வார் பரமர்திரு

வருளால் அங்குநின்றும் போய்ச்

சிலைமா மேரு வீரனார்

திருநன் னிலத்துச் சென்றெய்தி

வலமா வந்து கோயிலினுள்

வணங்கி மகிழ்ந்து பாடினார்

தலமார் கின்ற தண்ணியல்வெம்

மையினா னென்னும் தமிழ்மாலை

56

-தி. 12 சேக்கிழார்