அருளிய இறைவன் அருளாணையின் வண்ணம், பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 தடுத்தாட்கொண்ட புராணம். 70 - 74) குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, "அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது தகுமோ" என இரங்கி அருளிச்செய்தது. பண்: இந்தளம் பதிக எண்: 1 திருச்சிற்றம்பலம் 1. | பித்தாபிறை சூடீபெரு | | மானேயரு ளாளா | | எத்தான்மற வாதேநினைக் | | கின்றேன்மனத் துன்னை | | வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் | | நல்லூரருட் டுறையுள் | | அத்தாஉனக் காளாய்இனி | | அல்லேனென லாமே. | | 1 |
1. பொழிப்புரை: பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! குறிப்புரை: பொருளியைபுக்கேற்பத் திருப்பாடல்களுள் மொழிமாற்றி உரைக்கப்படுமாற்றை அறிந்துகொள்க. பித்தன் - பேரருள் உடையவன்; பேரருள் பித்தோடு ஒத்தலின், 'பித்து' எனப்படும். எனவே, பேரருள் உடைய சிவபெருமானுக்கே, 'பித்தன்' என்னும் பெயர் உரியதாயிற்று. இனி, 'சிவபெருமான்' பிறர்வயம் இன்றித் தன்வயம்
|