பக்கம் எண் :

458
 
வாணார்நுத லார்வலைப்பட் டடியேன்

பலவின்கனி ஈயது போல்வதன்முன்

ஆணோடுபெண் ணாமுரு வாகிநின்றாய்

அடியேனுய்யப் போவதொர் சூழல்சொல்லே.

9

31.நீரூர நெடுவயல் சூழ்புறவின்

நெல்வாயி லரத்துறை நின்மலனைத்

தேரூர்நெடு வீதிநன் மாடமலி

தென்னாவலர் கோனடித் தொண்டன்அணி

ஆரூரன் உரைத்தன நற்றமிழின்

மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார்

காரூர்களி வண்டறை யானைமன்ன

ரவராகியொர் விண்முழு தாள்பவரே.

10

திருச்சிற்றம்பலம்


மாசற்றனவனே, ஆணும், பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டு நிற்பவனே, அடியேன், ஒளி பொருந்திய நெற்றியையுடைய மாதரது மையலாகிய வலையிற்பட்டு, பலாப் பழத்தில் வீழ்ந்த ஈயைப் போல அழிவதற்குமுன், அவர் மையலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

கு-ரை: "சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் - கூனும் குறளும் ஊமும் செவிடும் - மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு - எண்பே ரெச்சம்" (புறம் - 28) என்பவாகலின், குறள் உருவினை, "மாணா உரு" என்று அருளிச்செய்தார். "நீள் நீள்" என்றது, 'நீளல் நீண்ட' எனப் பொருள் தந்து, "உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்" (கலி. - 23) என்றாற் போல நின்றது. 'வாளார்' என்பது, எதுகை நோக்கி, "வாணார்" எனத் திரிந்து நின்றது. "நீணுலகெலாம்" (தி. 5 ப. 2 பா. 4) என்றாற்போல, "ஆணோடு பெண்ணாம் உருவாகி நின்றாய்" என்றது, அவ்வுருவம் பெண்ணாசை நீக்கியருளு வது என்னும் குறிப்புடையது; "நின்றனையே - பெண்பயிலுருவ மொடு நினைந் தெனது பெண்மயலகற்றுநா ளுளதோ" (சோணசைல மாலை - 10) எனப் பிற்காலத்தவரும் கூறுமாறு அறிக.

10. பொ-ரை: நீர் பாய்கின்ற நீண்ட வயல்கள் சூழ்ந்த, முல்லை நிலத்தை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனாகிய இறைவனை, தேர் ஓடும் நீண்ட