பக்கம் எண் :

483
 
57.மாறு பட்ட வனத்த கத்தின்

மருவ வந்த வன்க ளிற்றைப்

பீறி இட்ட மாகப் போர்த்தீர்

பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்

கூறு பட்ட கொடியும் நீருங்

குலாவி யேற்றை அடர ஏறி

வேறு பட்டுத் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

6


58. காத லாலே கருதுந் தொண்டர்

கார ணத்த ராகி நின்றே

பூதம் பாடப் புரிந்து நட்டம்

புவனி யேத்த ஆட வல்லீர்

நீதி யாக ஏழி லோசை

நித்த ராகிச் சித்தர் சூழ

வேத மோதித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

7



6. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற, காட்டில் வாழப்பிறந்த, வலியகளிற்றை உரித்து, அதன் தோலை, விருப்பம் உண்டாகப் போர்த்தீர்; அன்ன வீரத்தை உடையீராயும், உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும், பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து, நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என்?

கு-ரை : "வனத்தின் மருவ வந்த" என்றது இன அடை. "ஏறி" என்னும் எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது.

7. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று, பூதங்கள் பாட, உலகம் உயர்த்துக்கூறுமாறு, நடனத்தை விரும்பி ஆடவல்லீர்; அவ்வாறாகவும், உலகியல் விளங்குதற் பொருட்டு, யோகியர் சூழ, ஏழிசையின்வழி நிலைத்து நின்று, வேதத்தை ஓதித் திரிதல் என்?

கு-ரை: 'நடனம் மெய்யுணர்வைத் தருவதாகலின், அதனை