பக்கம் எண் :

484
 
59. குரவு கொன்றை மதியம் மத்தங்

கொங்கை மாதர் கங்கை நாகம

விரவு கின்ற சடையு டையீர்

விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்

பரவும் என்மேற் பழிகள் போக்கீர்

பாக மாய மங்கை அஞ்சி

வெருவ வேழஞ் செற்ற தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

 8

60.மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்

நிச்ச யத்தால் நினைப்பு ளார்பால்

பாடுங் காட்டில் ஆடலுள்ளீர்

பரவும் வண்ணம் எங்ங னேதான்



மேற்கொண்டு செய்கின்ற நீர், உலகியல் நூலைப் பரப்பிக் கொண்டிருத்தல் என்னோ?' என்றவாறு. உயிர்களின் நிலை வேறுபாட்டிற்கேற்ப, இறைவன் பந்தத்தையும், வீட்டையும் தருபவனாய் நிற்றலை அருளிச் செய்தபடி.

8. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், 'குரா மலர், கொன்றை மலர், ஊமத்த மலர், பிறை, தனங்களையுடைய நங்கையாகிய கங்கை, பாம்பு' ஆகிய எல்லாம் தலைமயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர்; யாவர்க்கும் மூத்தீர்; அங்ஙனமாயினும், எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு, உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு, யானையை உரித்துப் போர்த்தது என்?

கு-ரை : 'குரவு முதலியன விரவுகின்ற சடையுடையீர்' என்றது, 'கங்கையும் பாம்பும் தம் ஆற்றல் மடங்கிப் பிறையோடு குரா முதலிய மலர்கள் போலக் கிடக்க வைத்த பேராற்றலுடையீர்' என்றபடி. "போக்கீர்" என்றதன்பின், 'அதனோடு' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. 'அடியவரைக் காக்கின்றிலீர்; மனைவியை அஞ்சப்பண்ணுகின்றீர்; இது தகுவதோ' என்பதாம்.

9. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர்