79. | தாழ்வெனுந் தன்மை விட்டுத் | | தனத்தையே மனத்தில் வைத்து | | வாழ்வதே கருதித் தொண்டர் | | மறுமைக்கொன் றீய கில்லார் | | ஆழ்குழிப் பட்ட போது | | அலக்கணில் ஒருவர்க் காவர் | | யாழ்முயன் றிருக்கும் ஆரூர் | | அப்பனே அஞ்சி னேனே. | | 7 |
80. | உதிரநீர் இறைச்சிக் குப்பை | | எடுத்தது மலக்கு கைம்மேல் | | வருவதோர் மாயக் கூரை | | வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் |
என்பது தாப்பிசையாய் முன்னும் பின்னும் இயைந்தது' 'வளாகம்' என்பது 'விளாகம்' என மருவிற்று. 'அணைவு' என்பது ஆகுபெயராய், அணையப்படும் இடத்தைக் குறித்தது. 7. பொ-ரை: மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு, அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி, பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு, மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர்; துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது, துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர். அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன். கு-ரை: தொண்டர் என்பது இழித்தற் குறிப்பு. 8. பொ-ரை: கருமை நிறத்தையுடைய திருமாலும், பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின்மேல் காணப்படுவதாகிய, விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன்
|