பக்கம் எண் :

503
 

9. திருவரிசிற்கரைப்புத்தூர்

பதிக வரலாறு:

நாயனார் திருவாஞ்சியமும் நறையூர்ச் சித்தீச்சரமும் பணிந்து திருஅரிசிற்கரைப்புத்தூரிறைவரைப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 ஏயர்கோன். புரா.61)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவனது பொருள் சேர்ந்த புகழைப் பலவாற்றாலும் எடுத்தோதியருளியது. இஃது இத் திருமுறையுள் ஐந்தாந் திருப்பதிகமாயிருந்து, பிற்காலத்துப் பிறழக் கோக்கப்பட்டது போலும்!

பண்: இந்தளம்

பதிக எண்: 9

திருச்சிற்றம்பலம்

83.மலைக்கும்மக ளஞ்ச மதகரியை

உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்

சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்

சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்

கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்

கலவம்மயிற் பீலியுங் காரகிலும்

அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை

அழகார்திருப் புத்தூர் அழகனீரே. 

1



1. பொ-ரை: மான்களின் கொம்புகளையும், யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து, தோகையையுடைய மயிலினது இறகுகளையும், கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர்; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர்; முழங்குகின்ற, கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர்; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர்.

கு-ரை: ‘இது நும் பெருமை’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே முடிக்க. ‘மலைக்