11. திருப்பூவணம் பதிக வரலாறு:
சுந்தரர் வேந்தர்களுடன் மதுரையில் தங்கியிருந்த நாள்களில் திருப்பூவணம் செல்லும் பொழுதில் தொண்டர்கள் இத்தலத்தைக் காட்டக் கண்டு ‘‘பெருமான் உறையும் பூவண மீதோ’’ என்று பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 கழறிற்றறிவார். புரா.98-99) குறிப்பு: இத்திருப்பதிகம் ‘இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்னும் தலம் இதுதானோ’ என அடியவர்களை வினவி அருளியது. பண்: இந்தளம் பதிக எண்: 11 திருச்சிற்றம்பலம் 104. | திருவுடை யார்திரு மாலய னாலும் உருவுடை யார்உமை யாளையொர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!
| | 1 |
105. | எண்ணி யிருந்து கிடந்தும் நடந்தும் அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
|
1. பொ-ரை: திருமால், பிரமன் ஆகிய காரணக் கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும், தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும் விருப்பம் உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, ‘திருப்பூவணம்’ என்னும் தலம் இதுதானோ? கு-ரை: ‘அயனால்’ என்னும் மூன்றாம் உருபை, ‘அயனில்’ என ஐந்தாம் உருபாகத் திரிக்க, ‘மால், அயன்’ என்பாரது செல்வமும், அவரிடத்து நிலைபெற்றிருப்பனவல்லவாகலின், சிவபிரானது வரம்பிலின்பம் ஒன்றே எல்லாவற்றிலும் மேலதாயிற்று. 2. பொ-ரை: இருப்பினும், கிடப்பினும், நடப்பினும், தம்மையே முதல்வராக ஓர்ந்து நினைவாரது வினைகளை நீக்குபவரும், அறவடி
|