118. | ஈழ நாட்டுமா தோட்டந்தென் | | னாட்டிரா மேச்சுரம் | | சோழ நாட்டுத் துருத்திநெய்த் | | தானந் திருமலை | | ஆழி யூரன நாட்டுக்கெல் | | லாம்அணி யாகிய | | கீழை யில்லர னார்க்கிடங் | | கிள்ளி குடியதே. | | 7 |
119. | நாளும் நன்னிலந் தென்பனை | | யூர்வட கஞ்சனூர் | | நீள நீள்சடை யான்நல்லிக் | | காவு நெடுங்களம் | | காள கண்டன் உறையுங் | | கடைமுடி கண்டியூர் | | வேளா நாட்டுவே ளூர்விளத் | | தூர்நாட்டு விளத்தூரே. | | 8 |
7. பொ-ரை: சிவபெருமானாருக்கு உரிய தலங்கள், ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவை. கு-ரை: மாதோட்டமாவது, அந்நகரின்கண்ணுள்ள, கேதீச்சரம். திருமலை, கீழையில், கிள்ளிகுடி இவை வைப்புத்தலங்கள். 8. பொ-ரை: ‘நன்னிலம், பனையூர், கஞ்சனூர், நெல்லிக்கா, நெடுங்களம், கடைமுடி, கண்டியூர், வேளா நாட்டில் உள்ள வேளூர், விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர்’ என்பவைகளில், மிக நீண்ட சடையையுடையவனும், நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனுமாகிய இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன். கு-ரை: ‘நெல்லிக்கா’ என்பது, ஈற்றில் உகரம் பெற்றது. வேளூரும், விளத்தூரும் வைப்புத் தலங்கள். ‘வேளார் நாட்டு’ எனவும் பாடம் ஓதுவர். ‘தென்பனையூர், வடகஞ்சனூர்’ என்றது, அவை தம்முள் நோக்கி.
|