143. | துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் | | தோற்றமுஞ் சிந்தித்துக் காணில் | | மணிப்படு கண்டனை வாயினாற் கூறி | | மனத்தினால் தொண்டனேன் நினைவேன் | | பணிப்படும் அரவம் பற்றிய கையர் | | பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் | | பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் | | இவரலா தில்லையோ பிரானார். | | 10 |
144 | ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன் | | அடியவர்க் கடியனு மானேன் | | உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் | | ஒண்மலர்ச் சேவடி காட்டாய் | | அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி | | லாச்சிரா மத்தெந்தம் மடிகள் | | பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் | | இவரலா தில்லையோ பிரானார். | | 11 |
10. பொ-ரை: வட்டாதல் தன்மையிற் பட்ட உடையும், நறும் பொடியாகப் பூசிய வெள்ளிய நீறும், மற்றும் இன்ன தோற்றமும் ஆகிய இவற்றது பெருமையை யுணர்ந்து, அவற்றைக் கண்டால், அடியேன் நீல கண்டத்தையுடைய எம்பெருமானாரைக் கண்டதாகவே மனத்தால் நினைத்து, வாயால் துதிப்பேன்; அவ்வாறாக, படத்தை யுடையதன் வகையிற்பட்டபாம்பைப் பிடித்த கையை யுடையவராகிய, திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர், என்னைத் தம்பால் கட்டுண்டு கிடக்குமாறு ஆட்கொண்டு, ஒன்றையும் ஈயாராயினும். அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ! கு-ரை: ‘காணில்’ என்றது, அடியவர் வேடத்தை யாதல் அறிக. ‘மணிப்படு கண்டன்’ என்றது பன்மை ஒருமை மயக்கம், பட்டுடை - முழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம். (சிந்தா. 468 நச். உரை.) 11. பொ-ரை: எய்தற்கரிய புகழையுடையராய பெரியோர்க்கு
|