179. | கட்டக்காட் டின்னட மாடுவ | | ரியாவர்க்கும் காட்சியொண்ணார் | | சுட்டவெண் ணீறணிந் தாடுவர் | | பாடுவர் தூயநெய்யால் | | வட்டக்குண் டத்தில் எரிவளர்த் | | தோம்பி மறைபயில்வார் | | அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல் | | நாம்இவர்க் காட்படோமே. | | 2 |
180. | பேருமோர் ஆயிரம் பேருடை | | யார்பெண்ணோ டாணுமல்லர் | | ஊரும தொற்றியூர் மற்றையூர் | | பெற்றவா நாமறியோம் |
கூறினமைஈண்டு நினைவு கூரற்பாலது. இங்ஙனமே, இத் திருப்பாடலிலும், வருகின்ற திருப்பாடலிலும் அருளப்பட்டவை சிவபிரானது இறைமைத் தன்மையைத் தெரிவிப்பனவாதல் அறிந்து கொள்க."எங்கோன்" என்றதை வருகின்ற திருப்பாடல்களிலும் இயைக்க. 2. பொ-ரை: எங்கள் தலைவர். இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார்; யாராலும் காண்பதற்கு அரியவர். சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார்; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள், வட்டமாகிய குழியில், தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி, அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார்; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! கு-ரை: ‘முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று (தி. 8 திருவா-திருச்சதகம் - 4) என்றருளியதனால், வேள்வியுள் ஊன் பாகம் பண்ணப்படுதல் இனிது பெறப்பட்டமையின், ‘அதனை உண்பார் இவர்‘ எனப் பழிப்பாயிற்று. "மறை பயில்வார் அட்டக்கொண்டு" என்றதனால், ‘வேதமுதல்வரும், வேள்வி முதல்வரும் ஆகியவர்’ என்பது அருளிய வாறாயிற்று. ‘அட்டக்கொண்டு’ என்புழிக் ககர ஒற்று, விரித்தல். 3. பொ-ரை: எங்கள் தலைவர். பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர்; இவர் பெண்ணும் அல்லர்; ஆணும் அல்லர்;
|