பக்கம் எண் :

607
 
216.விரையார் கொன்றையினாய் விம

லாஇனி உன்னையல்லால்

உரையேன் நாவதனால் உட

லில்உயிர் உள்ளளவும்

திரையார் தண்கழனித் திரு

மேற்ற ளிஉறையும்

அரையா உன்னையல்லால் அறிந்

தேத்த மாட்டேனே.

8

 

217.

நிலையா நின்னடியே நினைந்

தேன்நி னைதலுமே

தலைவா நின்னினையப் பணித்

தாய்ச லமொழிந்தேன்

சிலையார் மாமதில்சூழ் திரு

மேற்ற ளிஉறையும்

மலையே உன்னையல்லால் மகிழ்ந்

தேத்த மாட்டேனே.

9

 


8. பொ-ரை: நறுமணம் பொருந்திய கொன்றைமாலையை உடையவனே. தூயவனே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, அடியேன். என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி, உன்னையன்றிப் பிறரை, 'தேவர்' என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன்; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன்; இது திண்ணம்.

கு-ரை: 'ஏத்தல்' என்பது பின்னர் வருகின்றமையின், முன்னர் வந்த உரைத்தல், ஒருசொற் சொல்லலாயிற்று. ஆகவே, அதற்கு இவ்வாறுரைத்தல் பெறப்பட்டது. வலியுறுத்தற் பொருட்டு, "உன்னையல்லால்" என்பதனைப் பின்னுங் கூறினார். முன்னர், "நாவதனால்" என, வேண்டா கூறியதும் அன்னது.

9. பொ-ரை: சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே. தலைவனே, அடியேன், உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன்; அவ்வாறு உணர்ந்த அளவிலே அவ்வாறே