பக்கம் எண் :

62
 
"அடியேன் படுதுயர் களையாய்"

(தி. 7 ப. 69 பா. 3)

"வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே

அண்ணலே எனை அஞ்சலென் றருளாய்"

(தி. 7 ப. 70 பா. 2)

"உறவிலேன் உனையன்றிமற் றடியேன்

ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே"

(தி. 7 ப. 70 பா. 6)

என்றற்றொடக்கத்தனவற்றை நோக்குக.

ஞானசம்பந்தரது பாடல்களில் உள்ளவற்றினும், நாவுக்கரசரது பாடல்களில் பணிவு மிகுதியாய்த் தோன்றும்; எனினும், அவரது பாடல்களினும் அளவிட இயலாத பணிவு நம்பியாரூரரது பதிகத்திலே காணப்படுவதாம்.

முன்னை இருவரும் ஆண்டவனுக்கு அடிமையானவர்கள்; நம்பியாரூரர் அடியார்க்கு அடியரானவர். அதனானே இறைவன், தனக்கு அடிமைப்பட்டவரினும், தன் அடியார்க்கு அடிமைப்பட்டவரிடம் பெரிதும் எளியனாய் இருந்தான்.

இதனால், முன்னை இருவரும் அடியார்க்கு அடியராயினரல்லர் என்பது பொருளன்று; அடியார்க்கடியராதல் ஆளுடைய நம்பிகள்பால் முதன்மை பெற்று விளங்குகின்றது என்பதே பொருளாம். இது, திருத்தொண்டத் தொகை (தி. 7 ப. 39) யில் மட்டுமன்று;

"அத்தா ஆலங் காடாஉன் அடியார்க் கடியே னாவேனே"

(தி. 7 ப. 52 பா. 1)

"நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்"

(தி. 7 ப. 78 பா. 10)

என்றாற்போலப் பிறவிடத்துங் காணப்படுவதேயாம். இது பற்றியே சேக்கிழார், திருத்தொண்டர் புராணத்திற்கு நம்பியாரூரரையே தனிப் பெருந்தலைவராகக் கொண்டு அருளிச் செய்தார். அவர் அப் புராணச்