பக்கம் எண் :

620
 
காத்தாய் தொண்டுசெய்வார் வினை

கள்ள வைபோகப்

பார்த்தாய் நுற்கிடமாம் பழி

யில்கழிப் பாலையதே.

6


235.பருத்தாள் வன்பகட்டைப் பட

மாகமுன் பற்றியதள்

உரித்தாய் யானையின்தோல் உல

கந்தொழும் உத்தமனே

எரித்தாய் முப்புரமும் மிமை

யோர்க ளிடர்கடியுங்

கருத்தா தண்கழனிக் கழிப்

பாலை மேயானே.

7



உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே, உனக்கு இடமாவது, புகழையுடைய திருக்கழிப்பாலையே.

கு-ரை: "அவை, அது" பகுதிப் பொருள் விகுதிகள், 'பார்த்தானுக்கிடமாம்' என்பது பாடம் அன்று.

"பழி இல்" என்றது, புகழுடைமையின் மேல் நின்றது.

7. பொ-ரை: உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே, தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே. குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளியிருப்பவனே, நீ முன்பு யானையின் தோலைப் போர்வையாக விரும்பி, பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய்; முப்புரங்களையும் எரித்தாய்; இவை உனது வீரச் செயல்கள்.

கு-ரை: 'யானையின் தோலைப் படமாகப் பகட்டைப் பற்றி உரித்தாய்' எனக் கூட்டி, "ஆக" என்றதன்பின், 'விரும்பி' என ஒரு சொல் வருவித்து உரைக்க.