| | 236. | படைத்தாய் ஞாலமெலாம் படர் |  |  | புன்சடை யெம்பரமா |  |  | உடைத்தாய் வேள்விதனை உமை |  |  | யாளையொர் கூறுடையாய் |  |  | அடர்த்தாய் வல்லரக்கன் தலை |  |  | பத்தொடு தோள்நெரியக் |  |  | கடற்சா ருங்கழனிக் கழிப் |  |  | பாலை மேயானே. |  |  | 8 | 
 | 237. | பொய்யா நாவதனாற் புகழ் |  |  | வார்கள் மனத்தினுள்ளே |  |  | மெய்யே நின்றெரியும் விளக் |  |  | கேயொத்த தேவர்பிரான் |  |  | செய்யா னுங்கரிய நிறத் |  |  | தானுந் தெரிவரியான் |  |  | மையார் கண்ணியொடும் மகிழ் |  |  | வான்கழிப் பாலையதே. |  |  | 9 | 
 
 
 8. பொ-ரை:  விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, கடலைச் சார்ந்த, கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, நீ, உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்; தக்கனது வேள்வியை அழித்தாய்; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய்; இவை உன் வல்லமைகள்! கு-ரை: 'எல்லாவற்றையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லவன் நீ' என்றபடி. 9. பொ-ரை:  பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக்கழிப்பாலையையே விரும்பி, மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான். |