| | 240. | கீளார் கோவணமுந் திரு |  |  | நீறுமெய் பூசியுன்றன் |  |  | தாளே வந்தடைந்தேன் தலை |  |  | வாஎனை ஏன்றுகொள்நீ |  |  | வாளார் கண்ணிபங்கா மழ |  |  | பாடியுள் மாணிக்கமே |  |  | கேளா நின்னையல்லால் இனி |  |  | யாரை நினைக்கேனே. |  |  | 2 | 
 | 241. | எம்மான் எம்மனையென் றனக் |  |  | கெட்டனைச் சார்வாகார் |  |  | இம்மா யப்பிறவி பிறந் |  |  | தேஇறந் தெய்த்தொழிந்தேன் |  |  | மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ |  |  | பாடியுள் மாணிக்கமே |  |  | அம்மான் நின்னையல்லால் இனி |  |  | யாரை நினைக்கேனே. |  |  | 3 | 
 
 
  மயங்கிற்று. 'இப்பொழுது' என்றது, 'உன்னால் மெய்யுணர்வைத் தரப் பெற்ற இப்பொழுது' என்றவாறு. 2. பொ-ரை:  கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள். கு-ரை: "கோவணமும்" என்புழி, 'தற்று' என்பது எஞ்சி நின்றது. 'திருநீறும்' என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. இவ்வாறன்றி, "கோவணமும்" என்ற உம்மை வேறுவினை ஒடுவின் பொருளதாய் நின்றது எனலுமாம். "பூசி" என்பது பெயர்; விளியேற்று நின்றது. 'ஆளாய் நின்னையல்லால்' எனவும் பாடம் ஓதுப. 3. பொ-ரை:  மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, எங்கள் தலைவனே,  |