பக்கம் எண் :

624
 
240.

கீளார் கோவணமுந் திரு

நீறுமெய் பூசியுன்றன்

தாளே வந்தடைந்தேன் தலை

வாஎனை ஏன்றுகொள்நீ

வாளார் கண்ணிபங்கா மழ

பாடியுள் மாணிக்கமே

கேளா நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

2

241.

எம்மான் எம்மனையென் றனக்

கெட்டனைச் சார்வாகார்

இம்மா யப்பிறவி பிறந்

தேஇறந் தெய்த்தொழிந்தேன்

மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ

பாடியுள் மாணிக்கமே

அம்மான் நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

3



மயங்கிற்று. 'இப்பொழுது' என்றது, 'உன்னால் மெய்யுணர்வைத் தரப் பெற்ற இப்பொழுது' என்றவாறு.

2. பொ-ரை: கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள்.

கு-ரை: "கோவணமும்" என்புழி, 'தற்று' என்பது எஞ்சி நின்றது. 'திருநீறும்' என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. இவ்வாறன்றி, "கோவணமும்" என்ற உம்மை வேறுவினை ஒடுவின் பொருளதாய் நின்றது எனலுமாம். "பூசி" என்பது பெயர்; விளியேற்று நின்றது. 'ஆளாய் நின்னையல்லால்' எனவும் பாடம் ஓதுப.

3. பொ-ரை: மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, எங்கள் தலைவனே,