பக்கம் எண் :

629
 

விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள்.

கு-ரை: வைதிகத் திருவேயன்றி, மன்னவர் திருவும் உடைய வராதலின், "கோன்" என்பதற்கு, 'அரசன்' என்றே உரைத்தலும் பொருந்துவதேயாம்.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

அணைந்து திருக்கோ புரம் இறைஞ்சி

அன்பர்சூழ உடன்புகுந்து

பணங்கொள் அரவம் அணிந்தார்முன்

பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்

குணங்கொள் அருளின் திறம் போற்றிக்

கொண்ட புளகத் துடனுருகிப்

புணர்ந்த இசையால் திருப்பதிகம்

பொன்னார் மேனி என்றெடுத்து.

73


அன்னே உன்னை அல்லால்யான்

ஆரை நினைக்கேன் எனஏத்தித்

தன்னேர் இல்லாப் பதிகமலர்

சாத்தித் தொழுது புறம்பணைந்து

மன்னும் பதியில் சிலநாள்கள்

வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து

பொன்னிக் கரையின் இருமருங்கும்

பணிந்து மேல்பாற் போதுவார்.

74

- தி. 12 சேக்கிழார்