352. | பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும் | | பண்டை யாரலர் பெண்டிரும் | | நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும் | | நினைப்பொ ழிமட நெஞ்சமே | | மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம் | | மகிழும் மல்லிகை செண்பகம் | | புதிய பூமலர்ந் தெல்லி நாறும் | | புறம்ப யந்தொழப் போதுமே. | | 2 |
353. | புறந்தி ரைந்து நரம்பெழுந்து | | நரைத்து நீஉரை யாற்றளர்ந் | | தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை | | யரிது காணிஃ தறிதியேல் |
வானவர்கள் வந்த அன்று செவ்வி வாயாமையின், இரவெல்லாங் காத்து நின்றனர் என்க. ''தேவர்கள்'' என்ற இடத்து, 'ஆக' என்பது வருவிக்க. ஈண்டு, 'தேவர்கள்' என்றது, உயர்ந்த தேவர்களை. ''வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் - தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி'' என்ற திருவாசகத்தைக் காண்க. (தி.8 திருச்சதகம் 16.) 2. பொ-ரை: அறியாமையுடைய மனமே, நாம் வாழ்கின்ற ஊரும், மணந்த மனைவியரும், பெற்ற மக்களும், பிற சுற்றத்தாரும், தேடிய பொருளும், அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர்; அதனால், என்றும் உடன் தொடர்ந்தும் வாரார். ஆதலின், அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி; இனி நாம், சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும், மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; புறப்படு. கு-ரை: திணைவிராய் எண்ணப்பட்டன, பன்மையால் உயர்திணை முடிபு கொண்டன. ''நிதியில்'' என்றது, உடம்பொடு புணர்த்தலாகலின், இவ்வாறுரைக்கப்பட்டது. 3. பொ-ரை: மனமே, தோல் திரைந்து, நரம்புகள் வெளித் தோன்றி, வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய
|