பக்கம் எண் :

72
 
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்

பூதலங் ளவையெட்டும் பொழில்க ளெட்டும்

கலையெட்டும் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்

கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்

நகையெட்டு நாளெட்டும் நன்மை யெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்

திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

(தி. 6 ப. 34 பா. 9)

என்றும், 'ஐயன்காண் குமரன்காண் ஆதியான்காண்' என்றும் (தி. 6 ப. 24 பா. 8) அப்பர் சுவாமிகள் தெரிவிக்கிறார்கள். சுந்தரமூர்த்திகளும் 'முன்னமே முளைத்தான்' என்று ((தி. 7 ப. 67. பா. 9) குறிப்பிடுகிறார்.

'ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்
மூலமாய் எங்கும் முளைத்த லிங்கம்'

-சொக்கநாத. 1

என்ற அடியார் வாக்கும் ஈண்டு நினைவு கோடற்குரியது.

இறைவன் வானாகவும், மண்ணாகவும், வளியாகவும், ஒளியாகவும் இருந்து விளக்கம் செய்யும் அழகை நம்பியாரூரர் பல இடங்களில் எடுத்துப் பாடுவார்.

'ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்'

(தி. 7 ப. 1 பா. 7)

'நிலங்கிளர்நீர் நெருப்பொடு காற் றாகாசமாகி'

(தி. 7 ப. 34 பா. 9)

உருவாக அருவாக உளதாக இலதாக, மருவாக, மலராக, மணியாக, ஒளியாக, கருவாக, உயிராக, கதியாக, விதியாக வரும் ஈறிலா இறைவனை எளிமை பொங்கும் பாடல்களால் அர்ச்சித்தோர் எத்துணை பேர் என்று இயம்ப இயலுமா!

வீரத்தின் விளையாடல்:

எண்தோள் முக்கண் எம்மான் விளையாடலில் வெளிப்பட்ட