வீரத்தை வன்தொண்டர் பல இடங்களில் விதந்தோதுவார். (1)பிரமன் சிரமறுத்த பெரியோன்: 'பெண்படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடழித்தான்' (தி. 7 ப. 98 பா. 6) 'அருமலரோன் சிரம் ஒன்றறுத்தீர்' (தி. 7 ப. 9 பா. 2) (2)அந்தகனை வென்ற செந்தழல் வண்ணன்: 'செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனை'(-) (3)புரமெரித்த பரமன்: 'ஏற்றார் புரமூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்' (தி. 7 ப. 1 பா. 8) 'வெற்பார்வில் அரவுநாண் எரி அம்பால் விரவார் புரமூன்றும் எரிவித்த விகிர்தன்' (தி. 7 ப. 16 பா. 5) 'திரிபுரங்கள் வேவ எய்தானை' (தி. 7 ப. 38 பா. 7) 'திருந்தாத வாளவுணர் புரம்மூன்றும் வேவச் சிலைவளைவித் தொருகணையால் தொழில் பூண்ட சிவன்' (தி. 7 ப. 38 பா. 9) (4)தக்கனைச் சாடிய அக்கரவாரத்தான்: 'பழிக்கும் பெருந் தக்கன்எச் சம்மழியப் | பகலோன்முத லாப்பல தேவரையும் | தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத் தருளுஞ் | செய்கை யென்னை கொலோ' | (தி. 7 ப. 9 பா. 7) |
கொண்டாடுதல் புரியாவரு தக்கன் பெருவேள்வி செண்டாடுதல் புரிந்தான் திருச் சுழியற் பெருமானை'
(தி. 7 ப. 82 பா. 9)
|