பக்கம் எண் :

74
 

(5)சலந்தரனை வதைத்த சடைமுடியோன்:

'பிலந்தரு வாயினொடு பெரிதும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகமிரு பிளவாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள் கோன் நெடுமாற் கருள் செய்த பிரான்'

(தி. 7 ப. 98 பா. 5)

(6)கைம்மாவின் தோலுரித்த பெம்மான்:

'கடமா களியானை யுரித்தவனே'

(தி. 7 ப. 42 பா. 7)

'கம்ப மால் களிற்றின் உரியானை'

(தி. 7 ப. 55 பா. 10

'நடுங்க ஆனையுரி போர்த் துகந்தானை'

(தி. 7 ப. 57 பா. 4)

'கரியானை யுரிகொண்ட கையானை'

(தி. 7 ப. 59 பா. 7)

(7)காமனை எரித்த கண்ணுதலோன்:

'அழிக்கவந்த காமவேளை அவனுடைய தாதை காண
விழித்துகந்த வெற்றியென்னே வேலைசூழ் வெண்காடனீரே'

(தி. 7 ப. 6 பா. 2)

'நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள் செய்வார்'

(தி. 7 ப. 53 பா. 4)

(8)காலனை உதைத்த கழலோன்:

'வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்'

(தி. 7 ப. 12 பா. 1)

'அன்றாலின் நிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு'

(தி. 7 ப. 28 பா. 3)

'மட்டுலா மலர் கொண்டு அடியிணை வணங்கும்
மாணிதன் மேல் மதியாதே