பக்கம் எண் :

75
 

கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே'

(தி. 7 ப. 69 பா. 9)

இந்த எட்டுத் திருவிளையாடல்களும் நடந்த வீரத்தலங்களை 'அட்டவீரட்டம்' என்று அழைப்பர்.

பூமன் சிரங் கண்டி அந்தகன் கோவல் புரமதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே.

-தனிப்பாடல்

பின்னும் இறைவனது பெருமையை விளக்கும் வீரத் திருவிளையாடல்களும் உண்டு.

அடிமுடி தேடநின்ற அருட்பெருஞ் சோதி:

'மாவாய் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவாஅவர் தேடித் திரிந்து அலமந்தார்'

(தி. 7 ப. 13 பா. 10)

'மாலயனும் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்'

(தி. 7 ப. 16 பா. 8)

அலற நெரித்த அந்தி வண்ணன்:

'இலங்கையர் கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி'

(தி. 7 ப. 16 பா. 7)

'எறியும் மாகடல் இலங்கையர் கோனைத்

துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்

குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த'

(தி. 7 ப. 55 பா. 9)

ஆலமுண்ட நீலகண்டன்:

"விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த
வேலையுள் மிக்கெழுந் தெரியும்