| கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் | | கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் | | ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் | | ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | | 7 |
400. | கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த | | கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன் | | நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற | | நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் | | துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் | | தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் | | அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன் | | ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | | 8 |
401. | கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் | | காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் | | மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை | | மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் | | புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி | | பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் | | அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் | | ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | | 9 |
அணியும் அணி. வரிஞ்சை - ஊர்ப்பெயர். 'வரிஞ்சையர்கோன் கழற் சத்தி' என மாற்றி உரைக்க. 8. கு-ரை: காப்புக் கொண்டிருந்த - தமக்குப் பாதுகாவலாக உணர்ந்திருந்த. நிறை - நெஞ்சைத் தீ நெறியிற் செல்லாது நிறுத்துதல். நெல்வேலி வென்ற - திருநெல்வேலியில், அயல்நாட்டு அரசரை வென்ற. மயிலை - மயிலாப்பூர். அறை - அறுத்தல். ''நிறைக்கொண்ட'' முதலிய மூன்றிலும் ககர ஒற்று, விரித்தலாயிற்று. 9. கு-ரை: மடல் - இதழ். தார் - மாலை, அதள், தோல். ''ஆடி''
|