பக்கம் எண் :

760
 
402.

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

ஆருரன் ஆரூரில் அம்மானுக் காளே.

10


403.

மன்னியசீர் மறைநாவன் நீன்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

ஆருரில் அம்மானுக் கன்பரா வாரே.

11

திருச்சிற்றம்பலம்


என்றது பெயர். அடல் - வெற்றி.

10. கு-ரை: இத்திருப்பாடலில் அருளிச்செய்யப்பெற்றவர் அனைவரும், தொகையடியார்கள்.

11. கு-ரை: என்னவன் - எனக்கு உரியவன். காதலன் - மகன். 'சடையன், இசைஞானி இவர்க்கு மகன்' என்க.

'காதலனும், கோனும் ஆகிய அத்தன்மையுடையவனாம் நம்பியாரூரன்' என்க. உவப்பார் - அன்பால் மனம் உருகுகின்றவர்கள்.