| சிட்டன் திரிபுரஞ் சுட்ட | | தேவர்கள் தேவனை | | வெட்டெனப் பேசன்மின் தொண்டர் | | காள்எம் பிரானையே. | | 3 |
449. | நரிதலை கவ்வநின் றோரி | | கூப்பிட நள்ளிருள் | | எரிதலைப் பேய்புடை சூழ | | வாரிருட் காட்டிடைச் | | சிரிதலைமாலை சடைக்க | | ணிந்தஎஞ் செல்வனைப் | | பிரிதலைப் பேசன்மின் தொண்டர் | | காள்எம் பிரானையே. | | 4 |
திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை, வெறுத்துப் பேசன்மின். கு-ரை: 'பேசின், கெடுவீர்' என்பது குறிப்பெச்சம். இதுவும், அவன் தன்மை வரையறுக்கப்படாதென்றதேயாம். தட்டு - தடை. ஒட்டு - சார்பு. அடுக்குக்கள், வலியுறுத்தற் பொருள். ''தடுமாற்றத்தை, கோறலை'' என்ற இரண்டனுருபுகளை ''தட்டேனும்'' என்பதற்கு முன்னர் வைத்து உரைக்க. ''தொண்டர் காள்'' என்பவற்றையும் அடுக்காக்கி அதனை விரைவுப் பொருட்டென்க. 4. பொ-ரை : அடியவர்களே, நரிகள், இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க, ஓரிகள் கூக்குரலிட, செறிந்த இருட்காலத்தில், நெருப்பு எரிகின்ற இடத்தில், பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில், சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை, விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின்! கு-ரை: ''எரிதலை'' என்றதில், தலை, இடம். அன்றி, 'நெருப்பு எரிவதுபோலும் தலையை உடைய பேய்கள்' என்று உரைத்தலுமாம். 'நரிதலை கௌவ என்பது முதலாக இவ்வாறு எடுத்துச் சொல்லி இகழன்மின்' என்றவாறு. இவையே அவனது உண்மைநிலையன்று என்றபடி.
|