470. | விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக | | வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர் | | துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச் | | சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே | | வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல் | | மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக் | | கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர் | | கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | | 4 |
வைத்தநீர், இயைந்துள்ள உம் தேவியை நும்பால் வெறுப்புக் கொள்ளச் செய்தல் என்னை? என்பது குறிப்பு. 'எல்லாருங் காணப் பலி கொள்கையையும், நும் தேவி வெறுப்பன செய்தலையும் ஒழியீரா யினும், யான் வேண்டுவனவற்றை எனக்குஅளித்தருளல் வேண்டும்' என்பது கருத்தாகக் கொள்க. 4. பொ-ரை: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே. நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்; மற்றும், அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை அழகுடையதாய் விளங்க, தெருவில் விடையை ஏறிச் செல்வீர்; கொடி யனவாகிய பேய்கள் சூழநடன மாடுதலை மேற்கொண்டு. அழகுடையவராய், மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ? அல்லது பெருமையோ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது? சொல்லீர். கு-ரை: 'வீணடிமை உகந்தீர்' என்று கழறுவார், பிறவற்றையும் எடுத்துக் கூறிக் கழறினார் என்க. 'துட்ட' என்பது வடமொழி யாகலின், அதனடியாக வந்த பன்மை உயர்திணையாற் கூறப்பட்டுத் திணை மயக்கமாயிற்று. கொடிய பேய்கள் சூழ இருக்கின்ற உமக்குத் தூமதியம் தகாது' என்றவாறு.
|