| மோதி வேடுவர் கூறை கொள்ளு | | முருகன்பூண்டி மாநகர்வாய் | | ஏது காரண மேது காவல்கொண் | | டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | | 7 |
505. | படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் | | தோள்வ ரிநெடுங்கண் | | மடவ ரல்லுமை நங்கை தன்னையொர் | | பாகம் வைத்துகந்தீர் | | முடவ ரல்லீர் இடரி லீர்முருகன் | | பூண்டி மாநகர்வாய் | | இடவ மேறியும் போவ தாகில்நீர் | | எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | | 8 |
பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர்; அங்குப் போகாமல், வேடர்கள், வருவோரைத் தாக்கி, அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, யாது காரணத்தால், எதனைக் காத்துக் கொண்டு, எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்? கு-ரை: திருவொற்றியூரில் உத்திர நாளில் நீர்விழா நடைபெற்றமையை, "ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக ஒளிதிகழும் ஒற்றியூர்" (தி. 6 ப. 45 பா. 5) என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் திருமொழியால் உணர்க. "நீர்" என்றதனை முன்னிலைப் பெயராகக் கோடலுமாம். "உத்தி" என்பது பாடம் அன்று. 8. பொ-ரை: எம்பெருமானிரே, நீர், தனிமையாக இல்லாது, படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும், பருத்த தோள்களையும், வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய, 'உமை' என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர்; முடவரல்லீர்; ஆகவே, பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர்; அன்றியும், நீர,் விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால், இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, இங்கு, எதன்பொருட்டு இருக்கின்றீர்? கு-ரை: இடைக்குப் பாம்பு உவமையாகச் சொல்லப்படுதலும் மரபாதல் அறிக.
|