பக்கம் எண் :

868
 
548.வேழ முரிப்பர் மழுவாளர்

வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்

ஆழி யளிப்பர் அரிதனக்கு

ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்

ஏழை தலைவர் கடவூரில்

இறைவர் சிறுமான் மறிக்கையர்

பேழைச் சடையர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

9

549.மாட மல்கு கடவூரின்

மறையோர் ஏத்து மயானத்துப்

பீடைதீர அடியாருக்

கருளும் பெருமா னடிகள்சீர்

நாடி நாவ லாரூரன்

நம்பி சொன்ன நற்றமிழ்கள்

பாடு மடியார் கேட்பார்மேற்

பாவ மான பறையுமே.

10

திருச்சிற்றம்பலம்


9. பொ-ரை: திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்டு அறம் உரைப்பர்; மங்கை யொருத்திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர்.

கு-ரை: வேண்டும் சொற்கள், ஆற்றலால் வந்தன. இறை - இறுத்தல்; தங்குதல். பாம்பு முதலியன அடங்கிக் கிடத்தலின், "பேழைச் சடை" என்று அருளினார்.

10. பொ-ரை: மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது