| சீலந் தான்பெரி தும்மிக வல்ல | | சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த | | பாடல் பத்திவை வல்லவர் தாம் போய்ப் | | பரக திதிண்ணம் நண்ணுவர் தாமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
உலகத்தாரால்போற்றப்படுகின்ற நான்கு வேதம், வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும், ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பி யாரூரன் பாடிய இப் பத்துப்பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள், மேலான கதியைப் போய் அடைவார்கள்; இது திண்ணம். கு-ரை: "பெரிதும் மிக" ஒருபொருட் பன்மொழி. சிறுமை இங்கு இளமையைக் குறித்தது. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | அழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற் பதிகம் | ஆதிநீள்புரி அண்ணலை ஓதி | வழுத்தும் நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார் | மாதொர் பாகனார் மலர்ப்பதம் முன்னி | இழுக்கு நீக்கிட வேண்டுமென் றிரந்தே | எய்து வெந்துயர்க் கையற வினுக்கும் | பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப் | பணிந்து சாலவும் பலபல நினைவார். | - தி. 12 சேக்கிழார். |
|