பக்கம் எண் :

911
 

"பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின்

பாதமெல்லாம்

நாலஞ்சு புள்ளினம் ஏந்தின"


"நிலையும் பெருமையும் நீதியும் சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தஇத் தோணிபுரம்"
"முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த் தமரர்

சுற்றிக் கிடந்து தொழப்படுகின்றது..................கழுமலமே"

(தி. 4 ப. 82 பா. 1, 6, 7)

எனவும் அருளிச்செய்தனர், முன்னை அருளாசிரியரும். கழுமலமே பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களை உடைத்தாதலை,

"பிரமனூர் வேணு புரம்புகலி வெங்குருப்

பெருநீர்த் தோணி

புரம்மன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம்

புறவஞ் சண்பை

அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங்

காதி யாய

பதமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம்

பரவும் ஊரே"


(தி. 2 ப. 70 பா. 1)

என்றற் றொடக்கத்துத் திருஞானசம்பந்தர் திருமொழிகளாலும்,

"பிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்"

(தி. 12 திருஞா. பு. 14)

என்னும் சேக்கிழார் திருமொழியாலும் உணர்க. 'கழுமல வளநகர்' என, சேயதுபோலச் செய்யுள் வழக்குப்பற்றி அருளினாராயினும், 'இந்நகர்' எனச் சுட்டியுரைத்தலே திருவுள்ளம். இது திருப்பதிகங்கள் பலவற்றிற்கும் ஒக்கும்.

பெற்றுக்கொண்டேன், ஏற்றுக்கொண்டேன் என்பதுபோல,