பக்கம் எண் :

914
 
596.மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை

வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்

பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்

பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்

குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே

பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்

கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்e

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

4

597.குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங்

கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும்

வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும்

வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே



4. பொ-ரை: மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின், யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன்; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன்; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார்! இவ்வாறாதலின், அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும், இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன்; என்றாலும், அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின், காதிற் குழையையுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன்; இந்நிலையில் அவனை, இதுபோழ்து, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கழைக் கரும்பும், வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன்; இனியொரு குறையும் இலனாயினேன்.

கு-ரை: "மழைக்கு என்றது உருபு மயக்கம். "மழைக்கு அரும்பும் கொன்றை" என்றது, 'கார்க்கொன்றை' என்றவாறு. கழை, கரும்பின் வேறுபாடு. "கதலி, சோலை" என்பவற் றிடத்து வேண்டும் சொற்களை விரிக்க.

5. பொ-ரை: யான், உறக்கத்தில், 'குண்டலமும், குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே' என்றும், 'கொடிய மழுவாகிய