| உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை | | உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள் | | நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி | | நாதன் சேவடி நண்ணுவர் தாமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை, மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள், நரைத்தலும், மூத்தலும், இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர்; இது திண்ணம். கு-ரை: "ஊரன்" என்றது இடவழுவமைதி. நடலை - துன்பம்; அது, மிக்க துன்பமாகிய இறப்பைக் குறித்தது. 'இறத்தலின் மேலாய துன்பம் இல்லை' என்பதனை, "சாதலின் இன்னாததில்லை" என்னும் திருக்குறளாலும் உணர்க (230). 'ஆர்த்து' என்பது, பாடம் அன்று. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | மன்னுமருதின் அமர்ந்தாரை | வணங்கி மதுரச் சொன்மலர்கள் | பன்னிப் புனைந்து பணிந்தேத்திப் | பரவிப் போந்து தொண்டருடன் | அந்நற்பதியி லிருந்தகல்வா | ரரனார் திருநா கேச்சரத்தை | முன்னிப் புக்கு வலங்கொண்டு | முதல்வர் திருத்தாள் வணங்கினார். | 65 | -தி. 12 சேக்கிழார் |
|